செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல்
தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐ
அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் மாநில தலைவர் ஜி.முனுசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட
நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.மதி,
மாவட்ட செயலாளர் இராவத்தநல்லூர் து.தனசேகரன்,பேச்சாளர் முனைவர் தங்கபெரு.தமிழமுதன் தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் என்.யுவராஜ் எம்.கருணாநிதி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தலைமை ஆசிரியர் ஜி.ஸ்டிபன் துணை தலைமை ஆசிரியர் கிருபாசாந்தி
ஆசிரியர்கள் ஷீபாரோஸ்லின் பிரமிளாஞானகுமாரி பிரான்சிஸ்ஜெயக்குமார்
உட்பட மாணவர்கள் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *