துறையூர் நில தரகர்கள் நலச்சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு தண்ணீர் பந்தல் சாகுல் ஹமீது ஏற்பாட்டில் நீர் மோர் வழங்கப்பட்டது
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நலச்சங்கம் சார்பில் துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் பாபு என்கிற அ.சாகுல் ஹமீது தலைமையில் இரண்டாம் ஆண்டு தண்ணீர் பந்தல் மே-12 ஆம் தேதி துவங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஜூன் 7-ம் தேதி துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது சார்பில் பொது மக்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிலத்தரகர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். திருமுகம்,துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் நலச்சங்க செயலாளர் சி ராஜதுரை,பொருளாளர் ஏ எஸ் செந்தில்குமார், துணை தலைவர் அண்ணாமலை பாலு மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்