செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த பொற்பனங்கரனை
ஊராட்சியில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட பொற்பனங்கரனை
ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பொற்பனங்கரனை
ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசம்பத் தலைமையில் சித்தேரி கரையில் 1500 பண விதைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலிகள் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமரா,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்னன்,
வழக்கறிஞர் சம்பத், கலா, கந்தன், தேவி, வெற்றிவேல், ரவி, மற்றும் ஊராட்சி செயலாளர் ஷகிலா பானு உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.