ஆண்டிபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் நாடக மேடை அமைக்க எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திம்மிரச நாயக்கனூர் மற்றும் சண்முக சுந்தரபுரத்தில் சிதல மடைந்த பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தலா 32 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது

இதேபோல் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பந்துவார்பட்டியில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12.50. லட்சம் மதிப்பீட்டில் புதிய நாடக மேடை கட்ட பூமி பூஜையையும் எம்எல்ஏ ஆ. மகாராஜன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மொட்டனுத்து ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் பேரூர் திமுக செயலாளர் பூஞ்சோலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கிராம ஊராட்சி செயலாளர்கள் முன்னாள் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *