தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்

இந்த கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதுல மனுக்கள் என மொத்தம் 365 மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூபாய் 1 லட்சத்து 18 ஆயிரத்து 500 மதிப்பிலான பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 2 நபர்களுக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா 5.600 மதிப்பிலான தையல் இயந்திரங்களை 5 நபர்களுக்கும் ரூபாய் 6700 மதிப்பிலான தேய்ப்பு பெட்டி 5 நபர்களுக்கும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் தனித்துணை ஆட்சியர் சாந்தி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்‌ சிவபாலன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி மிகச் சிறப்பாக செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *