செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் பொன்னியம்மன்மேடு முனுசாமி நகரில் அமைந்துள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் செல்வ குபேர சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் கணபதி பூஜை, புன்னியாக வாகனம்,மஹா பூர்ணஹீதி, யாக பூஜைகள் உட்பட சிறப்பு பூஜைகள் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து குடங்களில் கொண்டு வரப்பட்ட புனித நன்நீரால் விமான கோபுர கலசத்திற்கு நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின் பக்த கோடிகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது . இதில் மாதவரம் 29 வது மாமன்ற உறுப்பினர் வாழைதோப்பு கார்த்தி திருஞாவுக்கரசு மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருளை பெற்றனர்.இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை செல்வ வினாயகர் தேவி கருமாரி அம்மன் ஆலய பக்தர்கள் சேவா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். மாதவரம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.