கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் தேசிய மருத்துவர் தின விழா கீழக்கொட்டையூர் ஜெயின் மருத்துவமனையில் நடைபெற்றது
இவ்விழாவில் சங்க தலைவர் லயன் சரவணன் தலைமையில் மாவட்ட ஆளுநர் PMJF லயன் D. மணிவண்ணன் அவர்கள் இளம் மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மக்கள் மருத்துவர் விருதுகள் வழங்கி சான்றிதழ் கொடுத்து 5 மருத்துவர்களை பாராட்டி கௌரவித்தார் தொடர்ந்து தஞ்சாவூர் டயாலிஸ் சென்டருக்கு டயாலிஸ் சேவை செய்வதற்காக ரூபாய் 3000 சங்க சாசன தலைவர் Mjf லயன் ச.இரவி அவர்கள் வழங்கினார்.
உடன் மருத்துவர் தினம் மாவட்ட தலைவர் T. முருகானந்தம் மாவட்ட அவை செயலார் அவை பொருளர் மண்டல தலைவர் ரமேஷ் வட்டார தலைவர் மற்ற சங்கங்களின் பொறுப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் மருத்துவமனை செவிலியர்கள் பொறுப்பாளர்கள் தலைவர் செயலர் கலந்து கொண்டனர்
விழா ஏற்பாடுகளை கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் செய்திருந்தனர்.