புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி கிராமத்தில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை மற்றும் ஆர் வி பி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மருத்துவர்கள் சுனிதா கதிரவன் மங்களேஸ்வரன் முகில்நிலவன் சுகந்தி ஹரிபிரசாத் ஆகியோர் கொண்ட மருத்துவர் குழுவினர் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை சர்க்கரை பரிசோதனை பொது மருத்துவம் பிசியோதெரபி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்

இந்த முகாமில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலினி செல்வமுருகன் அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்தார் இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் முகாம் ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *