தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1கோடிய 19 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மூலனூர் விற்பனைக் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை பருத்தி் விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 383 நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.
பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8ஆயிரத்து 527-கும் குறைந்தபட்சவிலை ரூபாய்.6ஆயிரத்து 550-கும் சராசரி விலை ரூ 7ஆயிரத்து550-கும் விற்பனையானது.
பருத்தியின் மொத்த அளவு 4ஆயிரத்து898மூட்டைகள் , குவிண்டால் ஆயிரத்து603.63 மதிப்பில் ரூபாய் 1கோடியே18லட்சத்து 67ஆயிரத்து522 க்கு நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 14வியாபாரிகள் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைகுழு முதுநிலை செயலாளர், சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்