திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சென்று வர ரோப் கார் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற ஜூலை-15 முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கப்பட உள்ளன. பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள் புதிதாக மாற்றப்பட உள்ளன.31-நாட்கள் பராமரிப்பு பணிக்கு பின் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ரோப் கார் கொண்டு வரப்படும் எனக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.