கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்
ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ,
மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக வாள் வீச்சு போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..
இந்நிலையில் கோவையில் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது முன்னதாக இதற்கான துவக்க விழா கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ், தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழர் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஃபோரம் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.. ,
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில், கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கேடட்,சப் ஜீனயர்,ஜூனியர் மற்றும் சீனியர் என பிரிவுகளில் ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், போட்டிகள் நடைபெற்றன…
இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாளை ஆவேசமாக சுழற்றி தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர் இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்ப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தியாகு நாகராஜ் தெரிவித்தார்..
கோயமுத்தூர் மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் நிர்வாகிகள் சிவமுருகன்,விமல் பிரசாத்,சரவணன் உட்பட உறுப்பினர்கள் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்..