ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே திம்மநாதபுரத்தில்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

கமுதி அருகே திம்மநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், திம்மநாதபுரம், டிவிஎஸ்புரம், மாவிலங்கை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.


இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் காதர் முகைதீன்,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சேதுராமன்,வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடேஷ்வரன், வேலவன்,ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,வட்ட வழங்கல் அலுவலர் விஜயா,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்தி,சத்தியேந்திரன் வருவாய் ஆய்வாளர்கள் பிரியதர்ஷினி, பரமேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் சாம்பசிவம், ஊராட்சி செயலர்கள் முருகன், குருமூர்த்தி,சிவக்குமார், முத்துராமலிங்கம் மற்றும்
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, ஆதிதிராவிடர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்,
விவசாயத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை,தொழிலாளர் நலத்துறை,
சுகாதாரத் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 438 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள், உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் மின்வாரிய பெயர் மாற்றங்கள் உடனடியாக செய்து தரப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *