காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் கடந்த மாதம் வாட்ஸ் அப் குழு அமைத்து 96 முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்களுடைய குடும்பத்தோடு சந்தித்துக் கொண்டனர்.

இந்த விழாவின் போது முன்னாள் மாணவர்கள் தங்கள் தோழிகளையும் தோழர்களையும் சந்தித்து மகிழ்ச்சியில் கைகளை குலுக்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் அதுமட்டுமல்லாமல் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தங்களுடைய குழந்தைகள் இந்த சந்திப்பின் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக மியூசிக் சேர் போன்ற விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர்

மதிய உணவின்போது தங்களுடைய குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டி விடும் விதமாக தோழிகளும் தோழர்களும் குழந்தைகளைப் போல மாறி உணவை ஊட்டி விட்டது அங்கிருந்த குழந்தைகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய முன்னாள் மாணவர்கள் நாங்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தோம். எங்களுடன் படித்தவர்களில் பலர் அரசு அதிகாரிகளாக உள்ளனர் ஆகவே தனியார் பள்ளியில் படிப்பதை விட அரசு பள்ளியில் படித்து முன்னேற வேண்டும் என தற்போதைய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *