கோவையில் நடைபெற்ற சியால் கார் பந்தயத்தின் இரண்டாவது தகுதி சுற்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செம்மண் பாதையில் சீறிப்பாய்ந்த கார்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்,வீராங்கனைக ள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவையில் விஷன் 4 மோட்டார் ஸ்போர்ட்ஸ் சொல்யூஷன் வழங்கும் சியால் எனும் தென்னிந்தியன் ஆட்டோக்ராஸ் லீக்கின் இரண்டாவது தகுதி சுற்று , மலுமிச்சம்பட்டி பகுதியில் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட பிரத்யேக டிராக்கில் நடைபெற்றது.

ஓபன் ,அமெச்சூர் மற்றும் லேடீஸ் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாடு முழுவதும் இருந்து பெண் ஓட்டுனர்கள் உட்பட 19 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர் இதில் ஓபன் பிரிவில் அஷ்வின்,அம்ஜத்,சோனாக்‌ஷி ஆகியோரும்,,அமெச்சூர் பிரிவில் 16 வயதான விஹான்,கரியப்பா,சித்தார்த் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்..

இதே போல,அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற பெண்கள் பிரிவில் பெருந்துறையை சேர்ந்த சோனாக்‌ஷி,எஸ்தர் பேர்லின்,ஆர்த்தி ஆகியோர் கடினமான செம்மண் பாதையில் சீறிப்பாய்ந்து முதல் மூன்று இடம் பிடித்து அசத்தினர்..

பந்தயத்தில் கலந்து கொண்ட ஓட்டுநர்கள் தங்களது தைரியம், திறமை, மற்றும் சாய்ந்த நிலத்தில் வாகனத்தை கட்டுப்பாடாக அதே சமயத்தில் வேகமாக இயக்கியதை ,பார்வையாளர்கள் புதிய அனுபவத்துடன் கண்டு வியந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *