மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி அழகாபுரி, இடையபட்டி ஆகிய கிராம பகுதிகளில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அழகாபுரி கிராமத்தில் வழங்கிக் கொண்டிருந்த போது மழை கடுமையாக பெய்து கொண்டிருந்தது அதையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தவரே நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், அருண்குமார், விவசாய அணி இடையப்பட்டி நடராஜன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பாலமேடு நகர செயலாளர் மனோகரவேல் பாண்டியன், கிளைச் செயலாளர்கள் அற்புதம், ரவிக்குமார், ஜெகநாத், மணி, கணேஷ்குமார், குமாரம் ஜெயராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபிரகாஷ்,தேவிமகேந்திரன், தனுஷ்கோடி, செந்தில்குமார், ஒப்பந்ததாரர்கள் பரந்தாமன், அன்பழகன்,விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பிரதாப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதீஷ், பொறியாளரணி பாலகிருஷ்ணன், ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *