தாராபுரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்ட முயற்சி.

தாராபுரம் .திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வரும் அருண்ராஜ் (வயது 20) அரவிந்த் (19) அண்ணன் தம்பியான இருவர்கள் இரண்டு பேர் திருப்பூர் மாவட்டம் குண்டடம் சங்கரண்டம் பாளையம் கிராமம் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்றனர்.

அப்போது அங்கு இருந்த ஓட்டல் தொழிலாளி வட மாநிலத்தை சேர்ந்தவராகும் அருண் ராஜ் அரவிந்த் ஆகியோருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் சேர்ந்து வட மாநில வாலிபரை வெட்ட முயன்றதாக தெரிகிறது. இதை கவனித்த ஓட்டல் உரிமையாளர் மணிகண்டன் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பொதுமக்கள் திரண்டதால் அருண் ராஜும் அரவிந்தும் தப்பி ஓடினர் அப்போது அவர்களை ரெண்டு பேரையும் தவறி கீழே விழு விழுந்ததில் படுகாயம் அடைந்தனர் இது பற்றிய அறிந்ததும் தாராவாரம் போலீசார் அங்கு சென்று ரெண்டு பெரிய மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *