கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 26 பயனாளிகளுக்கு ரூ. 9.90 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி கரூர் மாநகராட்சி வார்டு எண் 8,9 மற்றும் மண்மங்கலம் வட்டம் ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற இத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. தலைமையில் 26 பயனாளிகளுக்கு ரூ. 9.90 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் மரியாதைக்குரிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் “ உங்களுடன் ஸ்டாலின்” எனும் சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.
இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்களும் கரூர் மாவட்டத்தில் 179 முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 60 முகாம்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 49,333 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன.
இம்மனுக்களில் 18,074 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான கோரிக்கை மனுக்களாகும். பொதுமக்கள் அளிக்கும் ஒரு சில மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. சில மனுக்களுக்கு ஒருவார காலம் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படுகிறது.
அதிகபட்சம் 45 நாட்களுக்குள் இத்திட்ட முகாமில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவுகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள்தமிழ்நாடு முதலமைச்சர் தண்ணீர்பந்தல் பாளையம் முதல் வீரராக்கியம் வரை மொத்த திட்ட மதிப்பு ரூ. 200 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான நிதிகளையும் அரசாணைகளையும் வழங்கியுள்ளார்கள்.
இதில் முதற்கட்டமாக நிலமெடுப்பதற்காக ரூ.72 கோடி நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மண்மங்கலம் ஊராட்சியில் வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்கள்
“உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படும் எனும் உறுதியை தெரிவித்துக்கொண்டு, 5 ஆண்டுகள் தொடங்கி 40 ஆண்டுகள் வரை குடியிருந்து பட்டா இல்லாமல் வாழும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்படுவதற்காக 28,000 பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை கரூர் மாவட்டத்தில் 45,000 பயனாளிகளுக்கு இலவச வீட்ட மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையின் சார்பாக 13 நபர்களுக்கு சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல்பட்டதாரிச் சான்று, சிறு குறு விவசாயி சான்று, மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்களையும், கூட்டுறவு துறையின் சார்பாக 6 பயனாளிகளுக்கு ரூ. 4.92 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், மாநகராட்சியின் சார்பாக 6 நபர்களுக்கு சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், கரூர் நகர கூட்டுறவு வங்கியின் சார்பாக 1 நபருக்கு ரூ.4.98 இலட்சம் மதிப்பீட்டில் வீட்டு அடமானக் கடனுதவிகளும் என மொத்தம் 26 நபர்களுக்கு ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மரியாதைக்குரிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி வழங்கினார்.
இம்முகாமில் மாநகராட்சி மேயர் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, துணை மேயர் சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள், மண்மங்கலம் வட்டாட்சியர் மோகன் ராஜ் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.