துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநில மாநாடு விளக்க தெருமுனை கூட்டம்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் துறையூர் திராவிடர் கழக சார்பில் 17. 08. 2025 அன்று மாலை 6 மணியளவில் செங்கல்பட்டு மறைமலை நகரில் 04/10/2025 அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க மாநில மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வகிக்க, மாநில ப.க.அமைப்பாளர் அ. சண்முகம் வரவேற்புரை ஆற்ற,இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகாமுனி, மாவட்ட துணைத் தலைவர் முசிறி இரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர், மாவட்ட இளைஞரணி தலைவர்
தி.என்னாரசு பிராட்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுயமரியாதை இயக்க வரலாறு மற்றும் நமது இன்றைய வளர்ச்சி,அதற்கு காரணம் தந்தை பெரியார். சமஸ்கிருத திணிப்பு,இந்தி திணிப்பு, சனாதன செயல்பாடு,ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து பேசினார்.

இதில் இ.கம்யூனிஸ்ட் கட்சி விஏஓ.செல்வம்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொன்னுசாமி,சேவுகன் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி துணை தலைவர் த.ரஞ்சித் குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண்ராஜ். மாவட்ட மாணவரணி தலைவர் ரெ. தன்ராஜ், மாவட்ட ப. க. தலைவர் முனைவர் பெ. பாஸ்கர், மாவட்ட ப. க. செயலாளர் பி. பிரபு, மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ், துறையூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் இர.வரதராஜன்,உப்பிலியபுரம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மாராடி. எம். ஏ. ரமேஷ், துறையூர் நகர திராவிடர் கழக செயலாளர் ந.இளையராஜா,பொதுக்குழு உறுப்பினர் கோர்ட். பெ. பாலகிருஷ்ணன், சிங்களாந்தபுரம் கிளைத் தலைவர் ஞான சேகரன், மாணவரணி ம.இனியன் சம்பத்,கோர்ட் எம். ஆர். சந்திர போஸ்,துறையூர் நகர ப. க. அமைப்பாளர் அ. தமிழ்செல்வன்,ப. க. துணை அமைப்பாளர் க. கபில் தேவ், சபரி மற்றும் ஏராளமான பொதுமக்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றி கூறினார்.

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *