திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வலங்கைமான் வட்டப் பேரவை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.‌ பேரவைக்கு விஜயலெட்சுமி தலைமை வகித்தார், மாவட்ட துணைத் தலைவர் திரிபுரசுந்தரி கொடியினை ஏற்றினார்,

சிஜடியு மாவட்டச் செயலாளர் மாலதி துவக்கவுரையாற்றினார், ஒன்றியச் செயலாளர் ஜெயசித்ரா வேலை அறிக்கையையும், பொருளாளர் சூர்யா வரவு – செலவு அறிக்கையையும் வாசித்தனர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டத் தலைவர் கோ.பாலசுந்தரம், அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,

மாவட்ட செயலாளர் பிரேமா புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுறையாற்றினார். புதிய நிர்வாகிகளாக தலைவராக விஜயலெட்சுமி, செயலாளராக ஜெயசித்ரா, பொருளாளராக விஜயாஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினராக ரெத்தினகுமாரி மற்றும் 10- பேர் கொண்ட இணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ரூ.9000/- வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *