காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வளத்தான் சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி தொழிற்சாலை வளாகத்திற்குள் தனது இரு சக்கர வாகனத்தை விட்டு சென்று விட்டு பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.

இது தொடர்பாக பாளையம் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே வாரணவாசி அருகே ஒரகடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா முத்துக்குமார் வாலாஜாபாத்தை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. இதில் இளையராஜா மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போன பாளையத்தின் இருசக்கர வாகனத்தை திருடியதும் அதனை கண்டிகையில் இரும்பு கடை வைத்திருக்கும் டாலி என்பவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதும் அதனை டாலியிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இளையராஜா அஜய் முத்துக்குமார் டாலி ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *