புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார்.

செயலர் பாவலர் சீனு.மோகன்தாசு வரவேற்பு உரையாற்றினார். இம்மாத நிகழ்வில் புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நல வழித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் இயக்குனர் மருத்துவர் சு.செவ்வேள் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்து, பங்கேற்ற நியூ லேண்ட் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வில் துணைத் தலைவர் தமிழ்மாமணி ந.ஆதிகேசவன், புதுவைத் தமிழ்ச் சங்கப் பொருளர் மு.அருள்செல்வம்,பள்ளியின் தாளாளர் முனைவர் ரங்கநாதன்,துணைத்தலைவர் ப.திருநாவுக்கரசு, பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன்,துணைச்செயலர் தெ.தினகரன்,ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி அ.உசேன், கலைமாமணி எம்.எஸ். இராஜா, பொறிஞர் மு.சுரேஷ் குமார்,அ.சிவேந்திரன்,கவிஞர் இர.ஆனந்தராசன், முனைவர் அருள்ராஜ்,இளங்கோவன்,விஜயகுமார்,விஜயலட்சுமி நியூ லேண்ட் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என ஏராளமான திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *