அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:


அரியலூரில் நடந்தது அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் தண்டபாணி மகேந்திரன் துரைசாமி சவுந்தர்ராஜன் ராமசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள் நான்கு தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் காலி பணியிடங்களை நிரப்பி வேலை வாய்ப்பைப் பெருக்கிட வேண்டும் அரசு சொத்துகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும் 100 நாள் வேலை திட்ட நாட்களை அதிகரித்து நாள் கூலியை உயர்த்தி நகர்ப்புறங்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

இதில் தொமுச நிர்வாகிகள் பிவி அன்பழகன் டாஸ்மாக் சங்கர் சிஐடியு சார்பில் சகுந்தலா ரவீந்திரன் சிற்றம்பலம் கிருஷ்ணன் சந்தானம் முருகன் எஐடியுசி சார்பில் தனசிங் ஆறுமுகம் நல்லம்மாள் து பாண்டியன் வீவா ஐஎன்டியுசி சார்பில் விஜயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *