கோவை
வடசென்னை 2 பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனூஷ் தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது இதில் நடிகர் தனுஷ் பார்த்திபன் சத்யராஜ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகர் ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அப்போது இரண்டு முறை இட்லி கடை திரைப்படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்த தனூஷ் ரசிகர்கள் முந்தியடித்து முன்னால் செல்ல முயன்றதால் குழந்தைகளுடன் வந்த பெண்கள் நெரிசலில் சிக்கினர்.
மேலும் 4 பெண்கள் மயங்கி விழுந்ததால் அவர்களை போலீசார் மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். இதனிடையே மேடையில் தனூஷ் பேசத் துவங்கிய போது திடிரென தனூஷ் ரசிகர் ஒருவர் பாதுகாப்புகளை மீறி மேடை மீது ஏறி புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது பாதுகாவலர்களை இளைஞரை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர், அப்போது தனூஷ் இளைஞரை மேலே அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் கூறும் போது :
இட்லி கடை திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளேன்., பொதுவாக “ரோமேன்ஸ் தான் ஹீரோயிசம்” அப்படி தனூஷின் ரோமேன்ஸ் ரசிக்கிரேன். 35 ஆண்டுகளாக பல்வேறு இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ளேன். ஒரு சிலரை மட்டுமே இயக்குநர்களாக ஏற்றுக்கொள்வேன். மற்றவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமே. அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கிய செல்வராகவனை இயக்குநராக ஏற்றுக்கொண்டேன். அதனை தொடர்ந்து அவர் வீட்டில் இருந்து வந்த தனூஷ் சிறந்த இயக்குநராக உள்ளார். அப்போது கேள்வி பதில் என அரசியல் குறித்து பேசிய போது விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஜெயம் உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் சத்திய ராஜ் கொங்கு தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகம் படுத்தினர் அப்போது பேசிய அவர் :
தம்பி தனுஷ் உடன் நடிக்க ரொம்ப நாள் ஆசை, தற்போது அவர் இயக்கி, நடித்த படத்தில் நடித்துவிட்டேன். நான் ராஜமெளலியிடம் நடித்துவிட்டேன், தனூஷிடம் நடிப்பது சிரமம். இப்படி தான் நடிக்க வேண்டும் என நிற்பார். தம்பி பார்த்திபனுக்கு ரொம்ப லொள்ளுங்க என கிண்டல் செய்தார். தம்பி தனுஷ் தேசிய விருது வாங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் Bollywood-யில் கலக்கி வருகிறார். அதே போல ஆங்கிலத்தையும் மரியாதையாக பேசும் ஊர் கோவை தான் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனூஷ் கூறும் போது : எனக்கு சமைக்க ஆசை, அதே துறையில்
படிக்கவும் ஆசைப்பட்டேன். எனக்கும் அப்படியே தான் படமும் அமைகிறது. நாம் எண்ணம் போல வாழ்க்கை. இளைஞர்கள் என்ன சாதிக்க விரும்புகிறோம் என நம்ப வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். கருத்து கூறுகிறேன் என என்ன வேண்டாம். என் ரசிகர்கள் யாரு வம்புக்கும் போக மாட்டாங்க. இது எனக்கு பெரிய மகிழ்ச்சி உள்ளது. இப்படம் ஒரு சாதாரன படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். காலை 8 மணிக்கே வரும் விமர்சனத்தை நம்பாதீங்க, 12 மணிக்கு தான் தெரியும். சினிமாவிற்கு இது மிகவும் தேவை. அனைவரின் படமும் ஓட வேண்டும். சரியான விமர்சனம் பார்த்து நீங்கள் முடிவு செய்யும். வடசென்னை – 2 அடுத்த ஆண்டு வர உள்ளது என தெரிவித்தார்.