வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் அம்மன் ஸ்ரீ காமாட்சி அலங்காரத்தில் காட்சியளித்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாள் 24- ந்தேதி புதன்கிழமை மாலை 6மணிக்கு அம்மன் ஸ்ரீ காமாட்சி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் வரதராஜன் பேட்டை தெரு பாலசுப்பிரமணியன் புஷ்ப வியாபாரம் பா.யோகராஜ், பா.கோபிநாத் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *