திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று முன்தினம் மூன்றாம் நாள் 25- ந்தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ தான்ய லெட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது,
இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மூன்றாம் நாள் மண்டகப்படி உபயதாரர் சென்னை விவே. சுதாகர் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். நேற்று நான்காம் நாள் 26- ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நான்காம் நாள் மண்டகப்படி உபயதாரர் சென்னை சீதளாதேவி பாஸ்கரன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் த.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.