திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று முன்தினம் 7-ம்நாள் 29-ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏழாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் வலங்கைமான் கள்ளர் தெரு தங்க.தருமலிங்கம் மழவராயர், தங்க.துரைமாணிக்கம் மழவராயர், தெய்வத்திரு தங்க. கோவிந்தராஜன் மழவராயர் & குடும்பத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நேற்று எட்டாம் நாள் 30- ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ தனலெட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. எட்டாம் நாள் மண்டகப்படி உபயதாரர் வலங்கைமான் தியாகு இன்ஸ்டியூட் தெய்வத்திரு ஜி.பந்தையன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *