கரூர் செய்தியாளர் மரியான் பாபு
புகலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை இனிப்புகள் மற்றும் ரொக்கம் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் நகர் மன்ற தலைவர் குணசேகரன்.
கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் சேகர் என்கிற குணசேகரன் புகலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் சுமார் 200 பேருக்கும், நகராட்சியில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கும் வேஷ்டி, சேலை சட்டை இனிப்பு, காரம் மற்றும் ரொக்கம் பரிசு வழங்கி தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தீபாவளி வெகுமதியை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் நகர் மன்ற தலைவர் குணசேகரனுக்கு தீபாவளி வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி ஆணையர் நந்தகுமார்,நகர் மன்ற பொறியாளர் மலர்க்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்