கடந்த தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வும் வழங்கவில்லை மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்னல மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் புகார்.
தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் கீழ் மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள் ஆனால் தமிழக முழுவதும் 42 ஆயிரம் பேர் மக்களைத் தேடி மருத்துவ பணியாளராக பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த திமுக அரசு மார்ச் மாதம் ஏழாம் தேதி மக்களை தேடி மருத்துவப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மே மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
அதன் பிறகு புதியதாக பதிவேற்ற தமிழக வெற்றிக்கழக அரசு மக்களை தேடிய மருத்துவ பணியாளர்களுக்கு அரசாணை மூலம் வெளியிடப்பட்ட சம்பவ உயர்வு இன்று வரை வழங்கப்படவில்லை மேலும் கடந்த மூன்று மாத காலமாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் சம்பளம் கூட வழங்கப்படாமல் உள்ளது
இதனை அடுத்து என்று தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் அதன் பின்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை
எங்களை பணியில் நியமிக்கும் போது இரண்டு மணி நேரம் தான் வேலை என்றார்கள் ஆனால் தற்போது எல்லா வேலைக்கும் எங்களை அனுப்புகிறார்கள் பார்த்து வீடு பத்து பேருக்கு மாத்திரை வழங்கினால் போதும் என்று கூறினார்கள்
ஆனால் தற்போது காலை முதல் மாலை வரை பணி செய்து வருகிறோம் எங்களுக்கு நிறைய வேலை கொடுத்து எங்களுக்கு வேலைப்பளு வழங்குகிறார்கள் மே மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
ஆனால் இந்த அரசு எங்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை அதுபோல கடந்த மூன்று மாத காலமாக சம்பளமும் வழங்கவில்லை அதுபோல நாங்கள் பணி செய்யும் போது தேவையான பொருட்களும் நாங்கள் தான் வாங்க வேண்டியது 5500 சம்பளத்தில் 3000 ரூபாய் இதர செலவுக்கு செலவாகிறது எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் மேலும் எங்களை நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும் என மக்களை தேடி மருத்துவப் பணியாளர்கள் கூறினார்கள்