ஈரோட்டில் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மருந்தாளுனர்களுக்கு மாநில அளவிளான மாபெரும் பிரமாண்டமான முறையில் விருது வழங்கும் விழா

தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கம் சார்பில் மருந்தியல் படித்து பணிபுரியும் மருந்தாளுனர்களுக்காகவும்,மருந்தியல் கல்லூரிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களையும்,மற்றும் மருந்தியல் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அனைத்து மருந்தாளுனர்கள் பணியாளர்களையும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவிலான பரிசு வழங்கும் விழா இரண்டாவது ஆண்டு விழா ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே உள்ளே சுபிக்‌ஷா மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.C.K.சரஸ்வதி MBBS,DCH அவர்கள் மற்றும் தமிழ்நாடு பார்மசி கவுன்சில் பதிவாளர் டாக்டர்.M.தமிழ்மொழி அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும் டாக்டர்.A.புரட்சிக்கொடி M.PHARM,PH.D அவர்கள் BIT CAMPUS தலைமையாளர் திருச்சி மற்றும் டாக்டர்.S.அகிலாண்டேஸ்வரி M.PHARM,PH.D அவர்கள் ஸ்ரீனிவாசன் பார்மசி கல்லூரி தலைமையாளர் திருச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் திரு D.கார்த்திக் B.PHARMஅவர்கள் வரவேற்புரையாற்றினார்,மேலும் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சோ.வசந்த்குமார் M.PHARM அவர்கள் மற்றும் துணைச்செயலாளர் P.கிருஷ்ணகுமார் B.PHARM,MBA அவர்கள் நன்றியுறையாற்றினார்

மேலும் மாநில பொருளாளர் த.சந்தோஷ்குமார் மற்றும் சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் கா.ராஜகணபதி,கோவை மாவட்டத்தலைவர் அருண்குமார் அவர்கள்,நாமக்கல் மாவட்டத்தலைவர் தினேஸ்குமார் அவர்கள்,பொள்ளாச்சி செயலாளர் காமராஜ் அவர்கள்,சென்னை மாவட்டத்தலைவர் திருமதி.டாக்டர் மைத்ரேயி அவர்கள்,கடலூர் மாவட்டத்தலைவர் பிரபு அவர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருந்தியல் துறை கல்லூரி ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *