பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே
ஆதனூரில் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆதனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி பூச்சொரிதல் நிகழ்ச்சி, அம்மன் வீதிஉலா, மற்றும் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா முன்னிட்டு அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் தீக்குண்டம் முன்பு எழுந்தருள விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதிரௌபதி அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *