வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இடைத் தரகர் இன்றி பருத்தியை விற்று பயன்பெறலாம் என்று ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர்வீராசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் ஆதிச்ச மங்கலம், சந்திரசேகர புரம், கோவிந்த குடி, மருவத்தூர், மேல விடையல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 8,250ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது. அதிகபட்சமாக சித்தன்வாழர் ,வேளூர், மாத்தூர் ,விளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் முறையே சுமார் 250ஏக்கர்
வீதம் பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
சுமார் ஆயிரம் ஏக்கரில் கடந்த சில ஆண்டு வரை
பருத்தி சாகுபடி செய்து வந்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக சுமார் 8,250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பருத்திற்கு கூடுதல் விலை கிடைத்தது மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தின் உதவியுடன் மண் அணைத்தல், மண் கிளறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுவதால் பருத்தி சாகுபடி இந்த ஆண்டு கூடுதலாக உள்ளது. இந்நிலையில்திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைப் பெறுகிறது.
இந்நிலையில் நடப்பு பருவத்திற்கான பருத்தி ஏலம் ஒழுங்கு முறை விற்பனை கூட செயலாளர் ரமேஷ் (பொ)
உத்திரவின் பேரில் நடைப்பெற்றது. பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பரத்தியினை கொண்டு வந்தனர். 7வியபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால்
6ஆயிரத்து496ரூபாய்க்கும் , குறைந்த பட்ச விலையாக 5 ஆயிரத்து 419ரூபாய்க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூபாய் 6ஆயிரத்து 189க்கும் ஏலம் போனது.
நடைப்பெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 526குவிண்டால் பருத்தி 32லட்சத்து 75ஆயிரத்து86ரூபாய்க்கு ஏலம் போனது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைப்பெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பருத்தியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு இருப்பு வைப்ப
றைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் விவசாயிகளிடமிருந்து
பருத்தி அதிக அளவில் வரும் நிலையில் திறந்த
வெளியில் பருத்தியினை பாதுகாப்பாக வைத்திடும் வகையில்
தற்காலிக கூரைகள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியை
இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன்பெற ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர் வீராசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.