தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கடங்கனேரி ஊராட்சி வெங்கடேஸ்வரபுரம் காமராஜர் திருமண மண்டபத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலங்குளம் வட்டார வேளாண்மைத் துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் அவர்கள் தலைமையில்
நடைப்பெற்றது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி போஸ்,கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா துணை தலைவர் தங்க கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகராஜ், உழவர் நல குழு தலைவர் முத்துக்கனி, உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார் கணேசன் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகணேஷ் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *