தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் காய்கறிகள் மார்க்கெட் பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் வேண்டும் என பாஜக கோரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று ஹவுசிங் போர்டு, சக்தி நகர், சிவராஜ் பேட்டை , இந்திரா நகர் போன்ற பகுதிகளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பிரச்சார அணி தலைவர் அன்பழகன்

திருப்பத்தூர் நகராட்சி 33 வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும், சக்தி நகர் பகுதியில் உள்ள காய்கறிகள் மார்க்கெட் பகுதியில் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும், திருப்பத்தூர் நகராட்சி சார்பில் திருப்பத்தூர் நகராட்சி முழுவதும் சுங்கவரி கட்டணம் வசூல் செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. சாலை ஓரம் நடந்து செல்லும் நபர்களிடம் கூட 100 ரூபாய் சுங்க வரி வசூல் செய்யும் அவல நிலை உள்ளது, குறிப்பாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு சிறிய வியாபாரிகளிடம் கட்டாயம் 100 ரூபாய் சுங்கவரி வசூல் செய்யபடுகிறது. இதை தடுக்க வேண்டும், மேலும் திருப்பத்தூர் நகராட்சி 36 வது வார்டு தில்லை நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதில் பெரிய அளவில் முறை கேட்டு நடைபெற்று உள்ளது.

அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறாமல் கழிவு நீர்கள் சாலைகளில் தேங்கி நிற்கும் அவளை நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் சீர் செய்ய வேண்டிய நகராட்சி நிர்வாகம் ஆளும் திமுக அரசு கண்டும் காணாமல் உள்ளது விரைவில் திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மிகப் பெரிய அளவில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பேசினார்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் வினோத் குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு தலைவர் மேகநாதன், மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *