கள்ளகுறிச்சி மாவட்டம் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சோழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்க்காக சாதனை முயற்சியாக இன்று காலை ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த
சங்கர் – கவிதா இவர்களின் மகனும் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று கல்லூரி படித்து வரும் மாணவன் வெங்கடேஷ் என்பவர் மாடாம் பூண்டி கூட்டு ரோட்டில் இருந்து மணலூர்பேட்டை வரையிலான பத்து கிலோமீட்டர் தூரத்தை மிதிவண்டியை மிதித்தபடி இரு கைகளிலும் சிலம்பம் சுற்றியவாறு 20 நிமிடத்தில் கடந்து சாதனை புரிந்தார், இந்நிகழ்ச்சியை மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரன்,சோழன் உலக சாதனை அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை கொடி அசைத்து வைத்து துவக்கி வைத்தனர், சாதனை படைத்த மாணவன் வெங்கடேசஷ்க்கு சால்வை அணிவித்து சாதனை முயற்சியை பாராட்டி “சோழன் உலக சாதனை விருது” சான்றிதழை வழங்கினார்கள்,
இந்நிகழ்ச்சியில் சாதனை புரிந்த மாணவனுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.