பவானி சார்பதிவாளர் கண்டித்தும் தவறாக பத்திரப்பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்து கோரியும் சார் பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கன்னி வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் தேவி இவர் அவருக்கு சொந்தமான வீட்டை நான்கு சென்ட் நிலத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவருக்கு விற்றுள்ளார்,

தரணிதரன் பத்திர பதிவுக்காமல் நிலத்தை மட்டும் காண்பித்து காலி நிலம் என பத்தரவு பதிவு செய்ததாக கூறப்படுகிறது, மேலும் அப்பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு செல்லும் நடைபாதையை தரணிதரன் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது,

இதன் காரணமாக ஆத்திரமடைந்து அப்பகுதி பொதுமக்கள் தரணிதரனிடம் கேட்டுள்ளனர், ஆனால் அவர் முறையாக பதிலளிக்க அதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று சார் பாதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவறாக பதிவு செய்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் பத்திரப்பதிவை சரி பார்க்காமல் பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார் பதிவாளர் அலுவலகத்தின் முன்பு 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த பத்திரப்பதிவு நாள் அரசுக்கு கிடைக்க வேண்டிய பல லட்சம் வருமானம் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் சார் பதிவாளர் உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *