பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
அய்யம்பேட்டையில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினம்..
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மகாத்மா காந்தி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சமூக ஆர்வலர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மகாத்மா காந்தி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று பாரம்பரிய உணவகம் நடத்தி வருபவர் சபரிநாதன். மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரின் தீவிர பற்றாளரான இவர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரை நினைவு கூறும் விதமாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள், டிபன் பாக்ஸ்,நோட்டு,எழுதுபொருள் அடங்கிய மஞ்சப்பை ஆகியவற்றை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொருட்களை பெற்று சென்றனர்.