உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வலங்கைமான் அருகில் உள்ள அரித்துவார மங்கலம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் அருகில் உள்ள அரித்துவார மங்கலம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு
ட்பட்ட அரித்துவார மங்க லம் அரசினர் மேல்நிலை ப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்
அனுசரிக்கப்பட்டது.
இதில் ஆலங்குடி அரசுஆரம்ப சுகாதார நிலையவட்டார மருத்துவர் சத்யபாமா தலைமை வகித்தார். அரித்துவார
மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் கதிரவன்,சுகாதார மேற்பார்வையாளர் கோபு ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
வட்டார சுகாதார புள்ளியிளர் சியாமளா தேவி, சுகாதார ஆய்வாளர் அரவிந்தன், கிராம சுகாதார செவிலியர்கள்
நாகலட்சுமி,லெட்சுமி,பள்ளி தலைமையாசிரி யர் ராஜேந்திரன், உதவிதலைமை ஆசிரியர் மோகன் தமிழாசிரி யர்கள் வேதாம்பிகை,அழகுவேல்சாமி மற்றும்ஆசிரியர்கள், பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதுசமயம் பள்ளி மாணவர்களுக்கு பெண்சிசு கொலையில் சமூகத்தின் பங்கு மற்றும்பெண் கல்வியும் மக்கள்தொகை பெருக்கமும் என்ற தலைப்பில் நடைப் பெற்ற பேச்சு போட்டியில்வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பின்னர் மாணவர்களுக்கு சுகாதார துறைசார்பில் விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டு உறுதி
மொழி எடுத்துக் கொண்டனர்.