வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத் தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 610குவிண்டால் பருத்தி 44லட்சத்து 32ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. பருத்தி விளைச்சல் இறங்கு முகத்தில் உள்ள நிலையில் விலை ஏறு
முகத்தில் உள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்-நீடாமங்கலம் சாலையில் அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனைமற்றும் வணிகத்துறை
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோ றும் வெள்ளிக்கிழமைநடைபெறுகிறது. நடப்புபருவத்திற்கான பருத்தி ஏலம் நேற்று முன்தினம்ஒழுங்கு முறை விற்பனை கூட செயலாளர் ரமேஷ் (பொ) உத்திரவின் பேரில் நடைப்பெற் றது. பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியைகொண்டு வந்தனர். 3 வியாபாரிகள் கலந்து
கொண்டனர். பருத்தி அதிக பட்ச விலையாக குவிண்டால் 7,599ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 6,909 ரூபாய்
க்கும், சராசரி விலையாககுவிண்டால் ரூ. 7ஆயிர த்து 235 க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் நடைபெற்ற
பருத்தி மறைமுக ஏலத் தில் 610 குவிண்டால் பருத்தி 44லட்சத்து 32 ஆயிரத்து 564 ரூபாய்க்குஏலம் போனது.

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைப்பெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள்தங்களது பருத்தியை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில்கலந்து கொள்ள வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப் படும் பருத்தியை பாது காப்பாக வைத்து கொள்ளுதற்கு 2இருப்புவைப்பறைகள் தயார் நிலையில் உள்ளது.

தற்போது பருத்தி விளைச்சல் இறங்கு முகத்தில் உள்ள நிலையில் பருத்தி விலை ஏறு முகத்தில்
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சரியான எடை
மற்றும் நல்ல விலையில்பருத்தியை இடைத்தரகர் கள் இன்றி விற்பனை செய்து பயன் பெற ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர்வீராசாமி விவசாயிக ளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *