ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம்…..


மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் மதுரை, தல்லாகுளம் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் 6-அம்சக்கோரிக்கை
களை வலியுறுத்தி தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார/நகர/மாநகர/ மாவட்டக் கிளைகளின் சார்பில் 6 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில்
கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிடவும்
எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திப்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப்பொருளாளர் . ஹெலன் தெரேசா தலைமை வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர். எமிமால் ஞான செல்வி வரவேற்புரை ஆற்றினார். திருமங்கலம் கல்வி மாவட்ட செயலாளர்.முருகேசன் முன்னிலை வகித்தார்.

தோழமைச்சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், பாபு பிரேம்குமார், ஸ்ரீரங்கநாதன், மகுடீஸ்வரன், தமிழ், நடராஜன், ரவிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன், நீதி ராஜா வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச்செயலாளர்சீனிவாசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

மாவட்ட துணை செயலாளர் சுதந்திர பாண்டி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *