மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சின்ன திருவண்ணாமலைஎன்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம்
ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழு மற்றும் தென்னிந்திய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் புதன்கிழமை மாலை அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வஜ்ரகிரி வழிவிடு விநாயகர் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும், வேத மந்திரங்கள் ஒலிக்க, திருவாசகம், திருப்பதிகம் பாடி குரு மகா சன்னிதானம், ஸ்ரீ வஜ்ரகிரி மகான் வடபாதி ஆதீனம் சித்தர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகசென்னை திருநீறு சித்தர் சுவாமிகள், காஞ்சிபுரம் பவானி சங்கர் சுவாமிகள் ஸ்ரீ பாலாம்பிகை ரஜினி சுவாமிகள், வந்தவாசி ஸ்ரீ பூமி மாதா சக்தி பீடம் புருஷோத்தம சுவாமிகள், செங்கோல் சங்கிலி மஸ்தான் பாபாஜி சுவாமிகள்,தில்லை அம்பல மகா மந்திர குருஜி, சென்னை பிரபல ஜோதிடர்விஜய் முன்னிலையில்
சங்கு நாதங்கள் முழங்க,மகா தீபாராதனை காண்பித்து தொடங்கி வைத்தனர்.


இவ்விழாவில் ஆகாசசொர்ண பைரவர் சுவாமி விசேஷ அலங்காரத்துடன் வஜ்ரகிரி மலையை கிரிவலம் வர, சுவாமியை தொடர்ந்து, சென்னை, பாண்டிச்சேரி செங்கல்பட்டு, வந்தவாசி கும்பகோணம், திண்டிவனம், மதுராந்தகம், அச்சிறுபாக்கம்உள்ளிட்ட பகுதிகளில் இருந்து
கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அடியார்களுக்கும் சிறப்பான
ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழு சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை
வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல பொறுப்பாளர் அச்சிறுபாக்கம்
எஸ்.செல்வம்,கிரிவல குழு தலைவர் பிரிங்கிமலை மு.சரவணன்,சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *