தரங்கம்பாடி அருகே தனியார் பள்ளி வேன் மோதி கொத்தனார் உயிரிழப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரஜினி (42) இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருக்கடையூர் பகுதியில் கொத்தனார் வேலை செய்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கீழ்மாத்தூர் என்ற இடத்தில் வந்த போது செம்பனார் கோவில் உள்ள தனியார் பள்ளி வேன் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வம் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான ரஜினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் தனியார் பள்ளி வேன் டிரைவர் திருக்கடையூர் அபிஷேக கட்டளை கிராமத்தை சேர்ந்த உமா ரமணன் (23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தனியார் பள்ளி வேன் மோதிய கொத்தனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.