கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்குவதற்காக வால்பாறை,உருளிக்கல், சோலையாறு அணை மற்றும் வாட்டர் பால்ஸ் ஆகிய நான்கு சமையல் மையக்கூடங்களின் மூலம் உணவு தயார் செய்து சுமார் 61 மையங்களில் உள்ள ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்புவரை கல்வி பயிலும் 1009 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள மைய சமையல் கூடத்தில் இன்று சமைக்கப்பட்ட உணவுகளை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆய்வு மேற்க் கொண்டு உணவை பாதுகாப்பாக நல்ல முறையில் சமைத்து கொடுக்கவும், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கவும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்

இந்த ஆய்வின் போது அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் சத்தியவாணி முத்து, 5 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கவிதா முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர் கேட்டுக்கொண்டார் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் சத்தியவாணி முத்து, 5 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கவிதா முருகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்களும் மைய பணியாளர்களும் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *