மரங்களுக்காக மக்கள் ஒப்பாரி
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் முதல் திருநின்றவூர் வரை சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை ஓரம் இருந்து 374 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
ஏற்படுத்தியுள்ளத
இந்த மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக நீதிமன்ற உத்தரவின் படி ஒரு மரத்திற்கு 10 மரம் நடப்பட வேண்டும் என்று கோரிக்கையோடு பசுமைத்தாயகம் சார்பில் வெட்டப்பட்ட மரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒப்பாரி வைத்து நினைவஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது