தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் புதிய திருத்தேரை வடம் பிடித்து இழத்தனர்;-
தென்காசி மாவட்டம், இலஞ்சி, அருள்மிகு குமாரர் திருக் கோயிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு மாண்புமிகு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவரது ஆணைக்கிணங்க இத்திருத்தேர் திருப்பணிக்கு உபயதாரர் மூலம் பணிகள் முடிவுற்ற திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்துசமய இணை ஆணையர்
அறநிலையத் துறை, மண்டல அன்புமணி உபயதாரர் டி.ராஜேந்திரன் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், இலஞ்சிக்குமாரர் திருக்கோயில் செயல்அலுவலர் சுசிலாராணி, இலஞ்சி,பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் இலஞ்சி பேரூராட்சி துணைத் தலைவர் முத்தையா உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள்,முருகபக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.