கோவை மாவட்டம் வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஐவர் கால்பந்து போட்டி வால்பாறையிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்ட நிலையில் இறுதிப்போட்டியில் வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி மூன்று கோல் அடித்து வெற்றி பெற்று முதல் பரிசு கோப்பையை தட்டிச் சென்றது
இரண்டாவது பரிசை சோலையாறு அணை அணியும், மூன்றாவது பரிசை உருளிக்கல் அணியும், நான்காவது பரிசை ஸ்டான் மோர் அணியும் வென்றது இப்போட்டியை வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி பொறுப்பாளர்கள் எஸ்.சுபையர், ஆர்.பாலமுருகன், வி.மணிகண்டன், பாலவிக்னேஷ், குள்ளி என்கிற சதீஷ், மணிகண்டன், முருகன் ஆகியோர் சிறப்பாக நடத்தி வைத்தனர் இதில் சிறந்த விளையாட்டு வீரராக உருளிக்கல் அணியை சேர்ந்த முபஷீர்,சிறந்த கோல் கீப்பராக ஷியாள் ஆகியோர் அதற்கான விருதை பெற்றனர் வெகு சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கால்பந்தாட்ட வீரர்களும் பார்வையாளர்களாகிய பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்