சோழவந்தான்

சோழவந்தான் அருகே பிரசித்திபெற்ற குரு ஸ்தமாக விளங்கி வரும் குருவித்துறை வைகையாற்று கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் சித்திரரதவல்லப பெருமாள் திருக்கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உற்சவர்மூர்த்திகளான பஞ்சமூர்த்திபெருமாள் மற்றும் பெருமாள் சிலைகள் திருடுபோன சிலைகள் சுதைகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர்..

இதனால் கடந்த 5.ஆண்டுகளுக்குமேலாக கோவில் குருவித்துறை கிராமத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தநிலையில் எச்ஆர்சிஇ அதிகாரிகள் முன்னிலையில் சிலையின் சேதங்கள் சரிசெய்யப்பட்டது.இதனையெடுத்து நேற்று திருகோவில் வாளாகத்தில் பட்டர்கள் ஸ்ரீதர் ரெங்கநாதர்.பாலாஜி.ஆகியோர் தலைமையில் யாகசாலை தொடங்கி உற்சவர் மூர்த்திகள் சிலைகளுக்கு லெகு ஸ்ம்ப்ரோஷணம் பூஜைகள் நடந்தேறியது.

இதன் பின்னர் காலை .10.15.மணியளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு. திருக்கல்யாணம் நடந்து.இந்நிகழ்வில் வெங்கடேஷன்,எம்.எல்.எ. கோவில் ஆய்வாளர் ஜெயலெட்சுமி. செயல் அலுவலர் பாலமுருகன் .ஒன்றிய கவுன்சிலர் பசும் பொன்மாறன்.மற்றும் கோவில் பணியாளர்கள் நாகராஜ் மணி ஜனார்த்தனன் .மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *