அலங்காநல்லூர்
வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரியில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அ.இ.அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் சம்பத், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி கழக செயலாளர் கார்த்திக், கிளைக்கழக செயலாளர் சந்திரன்,ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை,ஒன்றிய கவுன்சிலர் ரேவதி,தொழில் நுட்ப பிரிவு கிளை செயலாளர் முருகன், ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்*