எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் புங்கனூர் மருதங்குடி உள்ளிட்ட கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.வி மகாபாரதி ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

பணிகளை விரைந்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார் அதனை தொடர்ந்து புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட சத்துணவு திட்ட உணவினை சாப்பிட்டு பார்த்ததுடன் அனைத்து அதிகாரிகளையும் சாப்பிட சொல்லி உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

அதனை தொடர்ந்து மருதங்குடி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலை மற்றும் குளம் வெட்டும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் நெல் உலர் தளம் முறையாக அமைக்கப்படாதது குறித்து அதிகாரிகளை கடிந்து கொண்டார் தொடர்ந்து அனைத்து பணிகளும்தரமாக நடைபெற வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அறிவுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *