முதல்வரின் கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தில் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு சிறுபாலம் அமைப்பதாக ஏழூர் மண்டு கிராம மக்கள் குற்றச்சாட்டு

கிருஷணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி கிராமத்திலிருந்து சந்தூர் வரை செல்லக்கூடிய சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு சிறு பாலத்துடன் கூடிய புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 18 லட்சத்து 89,000 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

ஏழூர் மண்டு என்னுமிடத்தில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிறு பாலம் தரமற்று கட்டப்படுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெவித்து பணிகளை நிறுத்தினர்.

சிறுபாலத்திற்காக அமைக்கப்பட்ட கான்கரீட் கையில் தள்ளினாலேயே உடைந்து விழும் அளவுக்கு தரமற்று அமைப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து இன்று கூடிய கிராம மக்கள் சிறுபாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை செய்ய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து ஏழூர் மண்டு பகுதியை சேர்ந்த ராமன் அவர்களிடம் கேட்டபோது, அடித்தளம் அமைக்கும்போதே தரமற்று அமைப்பதாக பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இஞ்சினியர்களுக்கு தகவல் அளித்தேன். இனிமேல் தரமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால் தற்போது சிறு பாலத்திற்கு தேவையான கான்கரீட் அமைத்துள்ளனர். கையில் பெயர்தெடுத்தாலேயே கான்கரீட் உடைந்து விழும் அளவுக்கு தரமற்று அமைத்துள்ளனர்.

நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு பிறகு சிறு பாலம் கிடைத்துள்ளது. கிராம புறம் என்பதால் பொது மக்கள் கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஒப்பந்ததாரர் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு அமைக்கின்றனர். அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு எங்கள் கிராமத்திற்கு தரமான பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *