பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் நீதிமன்றத்தில் சமரச துணை மையம் துவக்க விழா ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மையத்தில் சமரச துணை மையம் துவக்க விழா நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டுதலின்படி பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி சமரசத் துணை மையத்தை திறந்து வைத்து
சிறப்புரையாற்றினார்.
விழாவில் அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், வழக்கறிஞர்கள் ,கம்பன், ஜெயக்குமார் , இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முன்னதாக தலைமை எழுத்தர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்இளநிலை உதவியாளர் விக்னேஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள்,
பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் பாபநாசம் வட்டசட்ட பணியாளர்
குணசீலன் நன்றி கூறினார்.